இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தினவிழா நிகழ்ச்சி சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.தாலுகா செயலாளர் ஏபிஎம். சீனிவாசன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் நெமிலி நகர செயலாளர் செல்வமணி வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆர். வெங்கடேசன் கலந்துகொண்டார். அப்போது சங்க கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment