ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 19 May 2024

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்து சுமார் மூன்று வருடங்கள் முடிந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி மீண்டும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் கூட்டமானது ராணிப்பேட்டையில் உள்ள S.K. திருமண மஹாலில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, கலவை ஆகிய வட்டங்களில் உள்ள சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்களை ஒருமனதாக தேர்வு செய்தனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக மீண்டும் பா. சிவக்குமார் அவர்களும், மாவட்ட செயலாளராக சக்கரவர்த்தி அவர்களும், மாவட்ட பொருளாளராக .கீதா அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணை. தலைவராக லட்சுமி நாராயணன், மாவட்டத் துணைச் செயலாளராக  சத்தியமூர்த்தி, மாவட்ட பிரச்சார செயலாளராக வெங்கடேசன் ராணிப்பேட்டை கோட்டச் செயலாளராக முரளிமனோகர், அரக்கோணம் கோட்ட செயலாளராக நெடுஞ்செழியன் மற்றும் மாவட்ட கௌரவ தலைவராக .தாண்டவராயன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், கலவை ஆகிய வட்ட பொறுப்பாளர்களும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். 


மேற்படி இந்த கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பா. சிவக்குமார் அவர்கள் மீண்டும் மாவட்ட தலைவராக வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.


- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444... 

No comments:

Post a Comment

Post Top Ad