ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை, சாலை இணைப்பு சாலை சித்தாம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தார் சாலை 4 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள இந்த தார்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சித்தாம்பாடி, மேட்டு சித்தாம்பாடி, மங்களாபுரம், மிட்டபேட்டை, சோகனூர், பெருமாள்ராஜபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அரக்கோணம் செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் இந்த சாலையில் பயணம் மேற்கொள்ளும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்த சாலையை சீரமைக்க கோரி சித்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அவர்களை அணுகியபோது இது குறித்து சரியான பதில் அளிக்கவில்லை. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சித்தாம்பாடி பஞ்சாயத்து தார்சாலையை இது சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment