இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூர் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளி வளாகத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்றத்தலைவர் துலுக்கானம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கண் அரிப்பு, கண் சிவத்தல்,கண்ணில் நீர் வடிதல், தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை குறைபாடு, கண் புரை உள்ளிட்டவற்றிற்கு மருத்துவம் பார்த்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் கண் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை, கண் கண்ணாடி ஆகியவை இலவசமாக வழங்கபடவுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் மருத்துவர்கள், ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சுகுமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் கீழ்வெண்பாக்கம், நெல்வாய், மேல் வெண்பாக்கம், வதியூர், பள்ளுர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment