அரக்கோணத்தில் மத்திய அரசின் புதிய சட்டங்கள் குறித்து டிஎஸ்பி. வெங்கடேசன் தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 28 May 2024

அரக்கோணத்தில் மத்திய அரசின் புதிய சட்டங்கள் குறித்து டிஎஸ்பி. வெங்கடேசன் தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் மத்திய அரசால் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா ( பிஎன்எஸ்), பாரதிய நகரிக் சுரக்-ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (பிஎஸ்எ) உள்ளிட்ட மூன்று சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. 



இந்நிலையில் இந்த 3 முக்கிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரக்கோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களுக்கான சட்ட விளக்க பயிற்சி வகுப்பு அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரக்கோணம் இன்ஸ்பெக்டர்கள். செந்தில்குமார், பழனிவேல் மற்றும் காவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad