இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பள்ளுரில் உள்ள வீரபத்திர ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் கங்காதரன், துலுக்கானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி மணி வரவேற்புரை வழங்கினார்.
கூட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். அரசு பேருந்துகளில் அரை கட்டண சலுகையை நீக்கி முழுக்கட்டண சலுகை வழங்க வேண்டும். ஒன்றியத்திற்கு ஒரு கலைக்கூடம் கட்டிதர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இரயிலில் பயணம் செய்ய சலுகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கலைஞர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை விரைந்து வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் கலைஞர்களின் பிள்ளைகளுக்கு கட்டண சலுகை வழங்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதில் சென்னை, இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த நாடக கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment