இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த பூண்டி கிராமத்தில் அரசு பள்ளியில் +2 முடித்த மாணவி கவிதா மேற்கொண்டு நர்சிங் படிக்க விரும்பியும் தந்தை இழந்த நிலையில் தாயின் சொற்ப வருமானத்தில் படிக்க முடியாமல் இருந்தார்.
இதனையடுத்து மாணவியின் நிலை குறித்து ஆற்காடு ஸ்ரீ விநாயக பாராமெடிகல் கல்லூரி முதல்வர் திருமதி.ஹேமலதா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது, உடனே மாணவியை தன்னுடைய கல்லூரியில் நர்சிங் பயில இலவசமாக அனுமதி அளித்தார். மாணவி படிப்பு முடித்ததும் ஒரு நல்ல வேலை பெற்று கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment