ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்! அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு! கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை!. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 26 May 2024

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்! அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு! கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை!.


ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர்கள் துரைமஸ்தான், சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான இராணிப் பேட்டை ஆர்.காந்தி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். வருகிற 3ந்தேதி முன்னாள் முதல்வரும், மறைந்தாலும் நம் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ரத்ததானம், கண்தானம், அன்னதானம், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இனிப்பு வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றிக்கு வித்திட்ட இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல், மற்றும் கடந்த ஆண்டு தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல், மாவட்டம் முழுவதும் அம்மா உணவகங்களில் அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி தலைமையில் ஒரு ஆண்டு இலவசமாக உணவு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தல், உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன‌.


நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad