ராணிப்பேட்டை மாவட்டம் வைகாசி விசாக தினத்தை ஒட்டி திருத்தேர் பெருவிழா நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்தோடு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு சுவாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் இன்று இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ திருத்தேர் பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் மேலும் தற்போது இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ வைகாசி விசாக விழாவாக நடைபெற்றது. காலை சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டு மகா திபரதனை நடைபெற்றது. பின்பு பம்பை மேளம் கைலாய வாத்தியம் போன்ற மேளங்கள் வைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கங்களோடு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர.
- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...
No comments:
Post a Comment