வாலாஜா அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 5 May 2024

வாலாஜா அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி.

வாலாஜா அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். அவரது உடலைப் பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கல்நெஞ்சை கரைய வைத்தது...



ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சுமைதாங்கியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இங்கு காவேரிப்பாக்கம் பெரிய கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (வயது 60) என்பவர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இன்று கட்டிடங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக மின் மோட்டாரை எடுத்துச் சென்று அருகில் உள்ள குளத்தில் வைத்ததாக கூறப்படுகிறது. 
ஏற்கனவே ஸ்விட்ச் ஆன் செய்த நிலையில் மின் மோட்டாரை எடுத்துச் சென்று குளத்தில் வைத்த போது திடீரென அண்ணாதுரையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்..


இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் தகவல் அறிந்து இறந்த அண்ணாதுரையின் மனைவி தமயந்தி மற்றும் 3 மகன்கள் அவரது உறவினர்கள் அவரது உடலை பார்த்து தரையில் புரண்டும் கண்ணீர் விட்டும் கதறி அழுதது அரசு மருத்துவமனை வந்த நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


அண்ணாதுரையின் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கல்நெஞ்சையும் கரைய வைத்தது. இந்த சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad