வாலாஜாபேட்டையில் பிரம்மாண்டமாக கேரளா மேள வாத்தியங்களுடன் புத்தம் புதிய மராக்கர் பிரியாணி கடை புதியதாக திறக்கப்பட்டது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 28 May 2024

வாலாஜாபேட்டையில் பிரம்மாண்டமாக கேரளா மேள வாத்தியங்களுடன் புத்தம் புதிய மராக்கர் பிரியாணி கடை புதியதாக திறக்கப்பட்டது.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் பிரம்மாண்டமாக கேரளா மேள வாத்தியங்களுடன் புத்தம் புதிய மராக்கர் பிரியாணி கடை நிசார் அகமது, அல்தாப் அகமது ஆகியோர் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வாலாஜா காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு கடை உரிமையாளர் பிலால் அஹமது சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும் இந்த மரக்கர் பிரியாணி கடையில் சிறப்பு சலுகைகள் என்னவென்றால் (26.5.2024) முதல் (28.5.2024) மூன்று நாட்கள் வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ரூபாய் 150 வீதம் இரண்டு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசமாக விற்பனை செய்யப்பட உள்ளதால் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து பொதுமக்களும் தரமான பிரியாணியை வாங்கி உட்கொண்டு மகிழுமாறு கடையின் உரிமையாளர் தெரிவித்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் வாலாஜா காவல் உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444... 

No comments:

Post a Comment

Post Top Ad