நெமிலி அருகே நாகவேடு, கீழ்விதி, சயனபுரம் கிராமங்களில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெகத்ரட்சகன் எம்.பி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 21 June 2024

நெமிலி அருகே நாகவேடு, கீழ்விதி, சயனபுரம் கிராமங்களில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெகத்ரட்சகன் எம்.பி!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே நாகவேடு, கீழ்விதி, சயனபுரம் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு சென்ற மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டாவது முறையாக 3,06,55 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் 100-க்கும் அதிகமான திமுகவினர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு பாதாம் மாலை மற்றும் வெற்றி கிரிடம் அணிவித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு வரவேற்றனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், தணிகைவேல், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனசேகரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். விஜயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், வழக்கறிஞர்கள். குமரகுரு, பாபு, நாகவேடு கிளை நிர்வாகிகள். சேட்டு, சயனபுரம். சுந்தரம், நட்பு நவீன், பாளையத்தான் மற்றும் கிளை நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad