கணபதிபுரம் கங்கையம்மன் கோயிலில் வைகாசி மாதத்திருவிழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 3 June 2024

கணபதிபுரம் கங்கையம்மன் கோயிலில் வைகாசி மாதத்திருவிழா!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கணபதிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கங்கையம்மன் கோயிலில் நேற்று வைகாசி மாதத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர், வாசனை திரவியங்கள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு பக்தர்கள் விரதமிருந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். 

தொடர்ந்து பெண்கள் வேப்பிலை உடையணிந்து அம்மனுக்கு நேரத்திக்கடன் செலுத்தினர். பின்பு இரவு அம்மன் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஒவ்வொருவரும் கொழுக்கட்டை, சுண்டல் படைத்து அம்மனை வழிபட்டனர். இதில் முருங்கை, சித்தூர், புள்ளலூர், பள்ளுர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad