நெமிலி அருகே பின்னாவரம் ஊராட்சியில் ரூ. 18.42 லட்சம் மதிப்பீட்டில் மேநீர் தேக்கத் தொட்டி பூமி பூஜை பெ. வடிவேலு பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 August 2024

நெமிலி அருகே பின்னாவரம் ஊராட்சியில் ரூ. 18.42 லட்சம் மதிப்பீட்டில் மேநீர் தேக்கத் தொட்டி பூமி பூஜை பெ. வடிவேலு பங்கேற்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பின்னாவரம் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, நபார்டு 2024-2025 திட்டத்தின் மூலம் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேநீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சிவ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு மேநீர் தேக்கதொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ரவிச்சந்திரன், தாஸ்பிரகாஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர். கோட்டீஸ்வரன் மற்றும் கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad