ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
ஆற்காடு நகரத் தலைவர் பியாரே ஜான் தலைமை தாங்கினார் ஆற்காடு வட்டார தலைவர்கள் எஸ் எம் வீரப்பா எஸ் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் தீபன் நிர்மல் அனைவரையும் வரவேற்றார். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டமன்றத் துணைத் தலைவர் ஆன ஏ.எம் முனிரத்தினம் அவர்கள் பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
மாவட்டத் தலைவர் சி. பஞ்சாட்சரம், மாவட்டத் துணைத் தலைவர். விநாயகம், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் கே. நிஷாத் அகமத், ஓ பி சி மாவட்ட தலைவர். மொய்தீன், மாவட்ட பொதுச் செயலாளர். பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.அண்ணாதுரை மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம் பி டி அசேன், ஆற்காடு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஆர். கேசவன், எஸ்சி எஸ்டி மாநில செயலாளர் வி. நாகேஷ், ராணிப்பேட்டை நகர செயல் தலைவர். குப்புசாமி, மாவட்ட பொது செயலாளர்கள். நந்தகுமார், ஆற்காடு ஆனந்தன் ஆகியோர் புகழுரையாற்றினர். மேல்விசாரம் நகரத் தலைவர். அப்துல் சுக்கூர், நகரச் செயலாளர். அழகேசன், வாலாஜா நகரத் துணைத் தலைவர். கதிர்வேலு, ரஜினி, ஆற்காடு பூம்புகார். உசேன் தாகிர் பாஷா, பஸ் ஸ்டாண்ட் சேட்டு ஜி, மூர்த்தி, ரவி, அரசு, வாலாஜா பாலா, மண்ணுலிங்கம் கணபதி, வெங்கடேசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment