ராணிப்பேட்டை மாவட்டம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 80- வது பிறந்தநாளை முன்னிட்டு நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் நெமிலி நகர தலைவர். வேலு அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி ராஜிவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொருளாளர். ரவி, துணைத்தலைவர். எழிலரசன், ஒன்றிய தலைவர். நந்தகுமார், கழக நிர்வாகிகள். அன்பு, முரளி, சீனிவாசன், பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment