நெமிலி அருகே வேட்டாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 August 2024

நெமிலி அருகே வேட்டாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர். புவியரசு தலைமையில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பட்டதாரி ஆசிரியர். மாண்புகுமார் அவர்கள் கலந்துகொண்டு கண்காணிப்பாளராக செயல்பட்டார். 


புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அனைத்து பெற்றோர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என அனைவருக்கும் முன்கூட்டியே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் புதிய தலைவராக பப்பியம்மாள் அவர்களும் துணைத் தலைவராக கோகிலா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


இதில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ரவி, துணைத்தலைவர் கவிதா சிவக்குமார், ஆசிரியைகள் தேவிகா, கல்பனா, ரமேஷ், விவேக், வெங்கட் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad