இராணிப்பேட்டை மாவட்டம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை வரை செல்லும் பாலாறு பாலம் சென்ற மாதம் 10 ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கி தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்று வந்த நிலையில் பாலம் மூடப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் மற்றொரு பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்ட நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து பாலம் மீண்டும் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு போக்குவரத்து சேவை துவங்கியது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment