ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பதினைந்தாவது நிதி குழு மானியம் மூலம் ரூபாய் .5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கழிவறை வளாக கட்டிடம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது .மழை நேரங்களில் பொதுமக்கள் காலைக்கடனை முடிக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் இந்த சமுதாய கழிவறை வளாக கட்டிடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என துறையூர் கிராம பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- செய்தியாளர்.மு.பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment