இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் முதற்கட்டமாக 370 நபர்களுக்கு (பயனாளி ஒருவருக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில்) வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு, திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
இதில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள். (வ.ஊ) தாஸ்பிரகாஷ், (கி.ஊ)இரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திட்டப் பயனாளிகள் கலந்து கொண்டனர்!
செய்தியாளர்.மு.பிரகாசம்
நெமிலி தாலுகா
No comments:
Post a Comment