ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார். இதில் கலால் உதவி ஆணையர். வரதராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர். முருகேசன், நெமிலி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர். பன்னீர் செல்வம் மற்றும் பலர் முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் நாகவேடு, சித்தேரி, பருத்திபுத்தூர், ஓச்சலம், கிழாந்துறை, மேலாந்துறை உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment