ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கோ. கதிர்வேல் அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில் பார்வையாளராக அசநெல்லிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் ஏ.முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இவர் முன்னிலையில் தேர்தல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர். அம்மு தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர். கண்ணகி தனசேகர், முன்னாள் எஸ்எம்சி தலைவர். பிரபு, முன்னாள் எஸ்எம்சி கல்வியாளர். வழக்கறிஞர் ஆறுமுகம், கிராம வார்டு உறுப்பினர். தட்சிணாமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இதில் ஆசிரியர்கள். தீ.கீதா, பொன்.சிவானந்தம், ஆ.பிரியதர்ஷினி, இளநிலை உதவியாளர் த.மணிக்குமார், கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், ஐடிகே ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி மாணவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பின்பு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்தலில் எஸ்எம்சி தலைவராக மோகனா அவர்களும், துணைத்தலைவராக சத்யா அவர்களும் மற்றும் பல உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்பு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இறுதியில் இப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கு.மணிகண்டன் அவர்கள் நன்றிவுரை கூறினார்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment