ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்78-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர். வசந்தி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
விழாவிற்கு நெமிலி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன் தலைமை தாங்கினார். விழாவில் வார்டு உறுப்பினர். கந்தசாமி, கல்வியாளர். ராஜமாணிக்கம், சண்முகம், பள்ளி மேலாண்மை குழு தலைவி. சிவரஞ்சனி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர். தலைவர். ரேணுகாதேவி சரவணன், சண்முகம், ராஜமாணிக்கம், கந்தசாமி ஆகியோர் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா, தேசத் தலைவர் புத்தகம், போன்ற பரிசு பொருட்களை வழங்கினார்கள்.
மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசு பொருள் வழங்கப்பட்டது. இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment