நெமிலி அருகே சயனபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பவானி வடிவேலு தலைமையில் சுதந்திர தின விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

நெமிலி அருகே சயனபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பவானி வடிவேலு தலைமையில் சுதந்திர தின விழா!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். 


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். சுகன்யா ரவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை துறை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சயனபுரம் ஊராட்சி மன்றத்தின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் ஊராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad