ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர நாம் தமிழர் கட்சியின் நகரத் தலைவர் பழனி, செயலாளர் நிஷார்அஹமது, பொருளாளர் அன்பழகன், செய்தி தொடர்பாளர் பாண்டியன், நகர துணை செயலாளர் ஓஎஸ்.குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் சோளிங்கரிலுள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெருமாள் ஸ்ரீ சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் எம்.பரமேஸ்வரி, செயலாளர் பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினார் சோளிங்கர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.கலைக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமமுக கட்சியின் மண்டல அமைப்பாளருமான என்.ஜி.பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100க்கும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வேறு சில அறக்கட்டளை நிறுவன பொறுப்பாளர்களான செந்தில்குமார், பி.செல்வம், எஸ்.திலகவதி, எஸ்.கார்த்திகேயன், ஜே.ஏழுமலை, எஸ்.சங்கர், இ.கோவிந்தசாமி, எஸ்.ஆனந்தன் உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment