நெமிலி அருகே சயனபுரம்கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ! பவானி வடிவேலு பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 6 August 2024

நெமிலி அருகே சயனபுரம்கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ! பவானி வடிவேலு பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் சயனபுரம் ஊராட்சியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு தலைமை வகித்தார். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, விஏஓ டோமேசன், வார்டு உறுப்பினர் வாணி சதீஷ் பாபு முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி ஊழியர் அமலா வரவேற்றார்.  மாவட்ட சமூக பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன்பேசுகையில்ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் வட்டாரத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்றார். அதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றதலைவர் பவானி வடிவேலு பேசுகையில், சயனபுரம் ஊராட்சியில் பள்ளி அருகில் போதைதரும் பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் பார்த்துக்கொள்கிறோம் என்றார்.


கூட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர் ஜெயந்தி மற்றும் கிராம பொதுமக்கள், பள்ளிமாணவமாணவிகள்கலந்துகொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து குழந்தை திருமணம் தடுத்தல், போக்சோ சட்டம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளைஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


- செய்தியாளர். மு.பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad