அம்மூர் பேரூராட்சியில் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு அளந்து பட்டா வழங்க கோரிக்கை - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 6 August 2024

அம்மூர் பேரூராட்சியில் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு அளந்து பட்டா வழங்க கோரிக்கை


ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்மூர் பேரூராட்சியின் 11 வது வார்டு உறுப்பினர் சரிதா ஜெயவேல் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநிலத்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாக நான் அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு உறுப்பினராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளேன்.

மேட்டுக்காலனி, கூட்ரோடு, அம்பேத்கர் நகர்வாழ் ஆதி திராவிடர் மக்களுக்கு அரசாங்கத்தால் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசாங்கத்தால் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக 2007ம் ஆண்டு வழங்கப்பட்ட சர்வே எண்.322/1A இலவச வீட்டுமனை பட்டாக்கள் இதுநாள் வரையில் மக்கள் பயன்பாட்டிற்கு அளந்து கொடுக்கவில்லை.


ஏழை மக்கள் வீடு கட்ட இடம் தெரியாமல் அவதிபட்டு வருகின்றார்கள். அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக பட்டா வழங்கியதோ அது நிறைவேறாமல் உள்ளது. எனவே அம்மா அவர்கள் தயவு கூர்ந்து மக்கள் பயன்பெறும் வகையில் பட்டா இடத்தை அளந்துதருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad