இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேருந்து நிலையத்தில் கிழக்கு ஒன்றிய, நகர திமுக சார்பில் மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி ஒன்றியக்குழு தலைவர்.பெ. வடிவேலு தலைமையில் நடைபெற்றது. நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், நகர செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது திமுகவினர் அரக்கோணம் சாலையிலிருந்து ஊர்வலமாக வந்து அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சயனபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பவானி வடிவேலு,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி பேரூர் இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment