ராணிப்பேட்டை மாவட்டம் நாகவேடு கிராமத்தில் தாட்கோ மூலம் ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர். சந்திரகலா, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் சமுதாய கூடத்தில் குத்து விளக்கு ஏற்றினர். மேலும் இந்நிகழ்வில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment