மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.21 லட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 1 September 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.21 லட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.21 லட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் அமைச்சர் ஆர். காந்தி வழங்கல்!

ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒன்றிய அரசின் ஏடிஐபி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனமான ஏ.எல்‌.ஐ.எம்.சி.ஓ மூலம் 288 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.21 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கினார். 


உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்  சரவணகுமார், வருவாய் கோட்டாட்சியர் . ராஜராஜன், நேர்முக உதவியாளர் (பொது)  விஜயராகவன், நகரமன்ற தலைவர்கள் .சுஜாதா வினோத், ஹரிணிதில்லை, முஹமது ஹமீன், ஒன்றியக் குழு தலைவர்கள் அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, முடவு நீக்க தொழில்நுட்ப வல்லுனர் செல்வி. சுமையா காலித் (பி.எம்.டி.கே ஏ.எல்.எம்.ஐ.சி‌.ஓ சென்னை) மற்றும் பலர் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad