ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஆறு புதிய புறநகர் பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர். காந்தி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 September 2024

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஆறு புதிய புறநகர் பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர். காந்தி!

ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் இன்று (06.09.2024) இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டிலான 6 புதிய புறநகர் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா. இ.ஆ.ப, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி திருமூர்த்தி, போக்குவரத்து கழகம் வேலூர் மண்டல பொது மேலாளர்.  கணபதி, நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக் குழு தலைவர்கள். புவனேஸ்வரி, சத்தியநாதன், அசோக், தொ.மு.ச. ரமேஷ், வட்டாட்சியர். பாக்கியலட்சுமி, நகர செயலாளர் ஏ.வி.சரவணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கே.பி வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம்  நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad