ஆயிரமங்கலம் கிராமத்தில் அரசு விதிமுறையை மீறி மண் திருட பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்ய ஆட்சியரிடம் மனு . - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 September 2024

ஆயிரமங்கலம் கிராமத்தில் அரசு விதிமுறையை மீறி மண் திருட பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்ய ஆட்சியரிடம் மனு .


இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி. குளத்தில் விவசாய பயன்பாட்டிற்கு மண்பாண்டம் தொழில் செய்வதற்க்கு வண்டல் மண், களிமண், எடுத்து செல்ல விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது! அதன் அடிப்படையில், ஆயிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் த/பெ சன்முகம், பரதராமி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட சித்தேரியருந்து 100 கனமீட்டர் அளவு. 314. சர்வே எண், சித்தேரியிலிருந்து சுரேஷ் த/பெ சன்முகம், சுமார் 50 சென்ட் நிலத்திற்கு எடுத்து செல்ல, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாச்சியர் குறிப்பிட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் JCBTN 97C2937. (8) TN 73AK4323, TN25Q8717, TN7311767 செல்ல அனுமதி வழங்கியிருந்தனர். 

ஆனால் அவர் விதிமுறைகள் மீறி ஆரணி ஆற்காடு நெடுஞ்சாலையில் விவசாயி பயன்பாட்டிற்கு இல்லாத திருமண மண்டபம் கட்டுவதற்கு சுமார் 10 டேக்டர்களில் மண் எடுத்து சென்று கொண்டிருந்தனர். மேற்படி இடத்தை பொதுமக்களுடன் சென்று பார்த்த போது அதிகாரிகள் யாரும் இல்லை, மண் அளவீடு செய்து பர்மிட் போடுவதற்கு அரசு ஊழியர்கள் யாரும் இல்லாமல் எடுத்து சென்று கொண்டிருந்தனர். இந்த தகவலை நான் வட்டாச்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தேன். சிறிது நேரத்தில், தகவல் அறிந்த வட்டாச்சியர் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளர், ஆய்வு செய்தனர் முறைகேடாக மண் எடுத்து சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். இது சம்பந்தமாக அனுமதி இல்லாமல் மண் எடுத்து சென்றவர்கள் ஒன்று கூடி, சுமார், 3 1/2 pm மணி அளவில் திமிரி பாத்திகாரன்பட்டியில் உள்ள என்னுடைய அலுவலகத்தில் நின்று கொண்டு இருக்கும் போது சுமார் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். 


இந்த சம்பவத்தை நான், திமிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இல்லாத வாகனங்களை (மண் எடுத்து சென்ற வாகனங்களை) பறிமுதல் செய்து மண் திருட்டுக்கு துணை போன அணைத்து நபர்கள் மீதும் விசாரனை செய்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பத்துரூபாய் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad